Skip to main content

திமுகவினர் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கமே: செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன்

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
anbazhagan


திமுகவினர் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கமே என திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

முதலில், கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே மறைந்த கலைஞருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசி வருகின்றனர். முதலில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார், அதைத்தொடர்ந்து பேசிய ஜெ.அன்பழகன், ’நம்மை வழிநடத்த இருக்கிற ஸ்டாலின்’ என பேச்சை தொடங்கினார்.

தற்போதைய சூழலில் திமுகவினர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். திமுகவினர் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கமே உள்ளோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல்தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக தலைவர் கலைஞரின் குரலாக ஸ்டாலினின் குரல் ஒலித்தது என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்