Skip to main content

சிறைக்குள் மனைவியுடன் குடும்பம் நடத்திய எம்.எல்.ஏ; கையும் களவுமாகப் பிடித்த எஸ்.பி 

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

MLA who had a family with his wife inside the jail

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாவ் தொகுதியில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வாக அப்பாஸ் அன்சாரி இருக்கிறார். இவர் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதி ஆவார். மேலும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டவர். தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கிடையில் அப்பாஸ் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சித்ரகுட் சிறைக்கு மாற்றப்பட்டார்.

 

அப்பாஸுக்கு நிக்கத் பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் தன் கணவர் அப்பாஸுடன் சித்ரகுட் சிறையில் பகலில் அன்றாடம் தங்கி வந்திருக்கிறார். ஆனால் நிக்கத்தின் வருகை சிறை பார்வையாளர் பதிவேட்டில் எழுதப்படவில்லை. இந்த சந்திப்புகள் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகரின் அலுவலக அறையிலேயே நடைபெற்றிருக்கிறது. இந்த தகவல் வெளியில் கசியவே, சித்ரகுட் மாவட்ட எஸ்.பி. பிருந்தா சுக்லா இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

 

இதற்காக சித்தரகுட் ஆட்சியர் அபிஷேக் ஆனந்துடன் ரகசியமாக தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதி அப்பாஸின் அறை காலியாக இருந்தது. பிறகு சிறையின் அனைத்து அதிகாரிகளையும் தம்முடன் வந்த காவல் படையை கொண்டு சோதனை செய்திருக்கிறார். இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறை உள்பக்கம் தாழிட்டவாறு இருந்தது. அதற்குள் கைதி அப்பாஸ் தன்னுடைய மனைவி நிக்கத்துடன் சிக்கினார்.

 

அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் சிக்கியிருக்கின்றன. விசாரணையில் அப்பாஸ் கடந்த ஒன்றரை மாதமாக மனைவி நிக்கத்துடன் அந்த அறையில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. இத்துடன் அப்பாஸ் தன் மனைவியின் கைப்பேசிகள் மூலம் தன்னுடைய வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக புகார் இருக்கிறது.

 

MLA who had a family with his wife inside the jail

 

இவர்களை கையும் களவுமாக பிடித்த இளம் எஸ்.பி. பிருந்தா, வட இந்தியா முழுவதிலும் பிரபலமாகி பாராட்டை பெற்று வருகிறார். இதனிடையே, கைதி அப்பாஸுக்கு உதவியதாக சிறை அதிகாரிகள் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கைதி அப்பாஸை வேறு சிறைக்கு மாற்றி அவரின், சிறை வழக்கு உ.பி. அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக தன் கணவருடன் சிறையிலிருந்த நிக்கத் தற்போது சட்டப்படி அதனுள் கைதியாக இருக்கிறார்.

 

அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் சிக்கியிருக்கிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தார் அன்சாரி. இவர் சிறையில் இருந்தபடி பலமுறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். முக்தார் மீது 30 வழக்குகள் இருக்கின்றன. முக்தாரின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது...

 

 


 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.