Skip to main content

விக்ரமை சூழ்ந்த ரசிகர்கள்; ஏர்போர்ட்டில் தடியடி

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

vikram at trichy airport - fans gave an enthusiastic welcome

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

 

இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு. மேலும் தமிழ்நாடு, கேரளா. கர்நாடகாவில் உள்ள சில முக்கியமான நகரங்களில் ரசிகர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளனர். இந்த சுற்றுப் பயணம் இன்று முதல் தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.   

 

அதில் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விக்ரமிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் விக்ரமை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்புடன் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படத்தின் ட்ரைலர் வருகிற 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்