Skip to main content

சென்னை திரையரங்குகள் மூடல் -  திரையரங்கு  உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

theatre

 

தமிழகத்தில், கரோனா தொற்று பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு, சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களும், சில புதுப்படங்களும் வெளியானாலும், ரசிகர்கள் பெரிய அளவில் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதனால் சில திரையரங்குகள், சில சலுகைகளை அறிவித்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க முயன்றன. ஆனால் அம்முயற்சி பெரியளவில் பலனளிக்கவில்லை.

 

இந்த நிலையில், 'நிவர்' புயல் காரணமாகச் சென்னையில் கனத்த மழை பெய்து வருகிறது. மேலும், புயல் இரவு கரையைக் கடக்கும் போது, பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து புயலின் காரணமாக, சென்னையில் திரையரங்குகள் மூடப்படுவதாக திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், புயலின் தாக்கத்தைப் பொறுத்து, மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்