Skip to main content

"2 நிமிஷ ஷாட், 2 மணி நேர படம் பார்த்த திருப்திய கொடுத்துருச்சுனே" - பிரபலங்கள் சிலாகிக்கும் வீடியோ ஓவியம்! 

Published on 02/12/2020 | Edited on 02/12/2020
santhosh

 

 

சமூக வலைதளங்களில், அழகான ஆச்சர்யமான விஷயங்கள்,  உடனே பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி விடும். அப்படிதான் இப்பொழுது, ஆவி பறக்கும் டீயை வைத்து எடுக்கப்பட்ட, சில நொடி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உண்மையில் அதை வீடியோ என்பதை விட வீடியோ வடிவிலான ஓவியம் என கூறிவிடலாம்.

 

தற்போது, வைரலாகி வரும், அந்த 'வீடியோ ஓவியத்தை' தனது கேமரா தூரிகையால் வரைந்தவர், திரிஷா, ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் படத்தின் இயக்குனரும், ஓவியருமான  சந்தோஷ்   ஈஸ்வரமூர்த்தி. இவர் எடுத்த, அந்த வீடியோ ரசிகர்களிடம் மட்டுமில்லாமல், பிரபலங்களிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

 

நடிகர் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வீடியோவை பகிர்ந்து, "சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான், ரெண்டு நிமிஷ ஷாட், ரெண்டு மணி நேர படம் பார்த்த திருப்திய கொடுத்துருச்சுனே, மனசெல்லாம் சந்தோஷம்னே" என சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தியை பாராட்டியுள்ளார். அதேபோல், இயக்குனர் லிங்குசாமியும், " மனசெல்லாம் படத்தின் இயக்குனர் எடுத்த இந்த ஷாட்-டை பார்க்க நேர்ந்தது. உடனே மிகவும் பிடித்துப்போய்விட்டது மட்டுமில்லாமல், இங்கு பகிரவேண்டுமென்றும் தோன்றியது" என கூறி, அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்