Skip to main content

தட்டிவிட்ட போனுக்கு பதிலாக புது போன் வாங்கிக்கொடுத்த சிவகுமார் 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
sivakumar

 

 

 

சமீபத்தில் ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிவக்குமார், அந்தக் கூட்டத்தில் ராகுல் என்ற ஒரு இளைஞன் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை தட்டி விட்டார். இவர் செயல் குறித்து பலதரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரிடமும் தன் செயலுக்காக சில தினங்களுக்கு முன் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மதுரை ஐஸ்வர்யா மகப்பேறு மருத்துவமணை திறப்பு விழா நிகழ்ச்சியில், கலந்துகொண்டார் நடிகர் சிவக்குமார். அப்போது அந்த விழாவிற்கு இளைஞர் ராகுலை வரவைத்து கீழே விழுந்த மொபைல் ஃபோனுக்கு பதிலாக சுமார் ரூ.21,000/. மதிப்புள்ள புதிய ஃபோனை நடிகர் சிவகுமார் சார்பாக அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து இளைஞன் ராகுல் பேசியபோது..."நடிகர் சிவக்குமார் அவர்கள் எனக்கு புது ஃபோன் வாங்கிக் கொடுத்தார். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்