Skip to main content

பிரேமம் இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா... முழுவீச்சில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பு!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Nayanthara

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அடுத்த சில ஆண்டுகள் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன், ஃபகத் பாசிலை நாயகனாக வைத்து பாட்டு என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவித்தார். இப்படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருந்தார். கரோனா பரவல் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இப்படத்தின் பணிகளைத் தொடங்க முடியாத சூழல் நிலவியதையடுத்து, பாட்டு படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

 

இதனையடுத்து, அல்போன்ஸ் புத்திரன் நடிகர் பிரித்வி ராஜை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கோல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிரித்வி ராஜிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்