Skip to main content

"ஆடியோ ஃபங்க்ஷன் போனால் கூட ஓரமா நிக்க வச்சுருவாங்க..." - நயன்தாரா

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

nayanthara interview latest

 

'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

திரைத்துறையில் நுழைந்து 20 வருடங்களை நெருங்கவுள்ள நயன்தாரா தனது ஆரம்பக்கட்ட நிகழ்வுகள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், "என் 18வயதில் சினிமாத்துறைக்குள் வந்தேன். ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், சினிமா குறித்து யாராவது பேசினால் அதில் என் பெயரும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை கொஞ்சம் நிறைவேறியிருக்கிறது. அதுவே பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். 

 

நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் நடந்துவிட்டது. ஆனால் நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. முதல் 10 வருடம் முடிந்து அடுத்த கட்டத்தைத் தொடரும்போது சில கனவுகள் இருந்தது. ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளியாவதில்லை. பெண்களை ஏன் சமமாக நடத்தப்படுவதில்லை என நிறைய யோசித்திருக்கிறேன். அப்போதெல்லாம், ஒரு ஆடியோ ஃபங்க்ஷனுக்கு போனா கூட ஓரமா நிக்க வச்சுருவாங்க. பெரிதளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டாங்க. 

 

அந்த காரணத்தினால்தான் படங்களின் விழாக்களுக்கே போவதை தவிர்த்தேன். நான் கண்ட கனவுகளை எல்லாம் முடித்துவிட்டு எல்லா விழாக்களிலும் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை. பெண்களுக்குச் சமமான நிலை ஏற்படுத்த வேண்டும்; சமமாக நடத்தப்படவில்லை என்றாலும் ஓரளவுக்குச் சமமான இடம் நமக்கு இருக்கணும் என ஆசைப்பட்டேன். அது இப்போ கொஞ்சம் நிறைவேறி இருக்கிறதாகப் பார்க்கிறேன். பெண்கள் மையப்படுத்தின கதை நிறைய உருவாகிறது. பல தயாரிப்பாளர்கள் பெண்கள் மையப்படுத்தின படத்தை எடுக்க முன் வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது" என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விக்னேஷ் சிவன் தந்தை மீது போலீசில் புகார்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Complaint of extortion of property against director Vigneshsivan's father

 

தமிழில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இவர் பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மனைவி நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார்.

 

இவரின் திருமணத்திற்கு உறவினர்கள் யாரையும் கூப்பிடாமல் பிரபலங்களை மட்டுமே வைத்து நடத்திவிட்டார் என்று இவரின் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த நிலையில் இவரது தந்தை சிவகொழுந்து உறவினர்களின் சொத்தை அபகரித்து விட்டதாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த புகாரில் சிவகொழுந்துவின் உடன்பிறந்த சகோதரர் ஒருவருக்கு தர வேண்டிய நிலத்தின் பங்கினைத் தராமல் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த சொத்திற்கு ஒரு வகையில் பங்குதாரரான விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி மற்றும் அந்த குடும்பத்தின் மருமகள் நயன்தாரா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.