Skip to main content

"ஒரு நல்ல திரைப்படம் சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்" - டி. இமான்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

imman about kazhuvethi Moorkan

 

அருள்நிதி நடிப்பில் ‘ராட்சசி’ பட இயக்குநர் சை. கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே 26 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

 

இப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, "கழுவேத்தி மூர்க்கன், 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியைப் பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜுக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். 

 

இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் டி. இமான் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "50 நாட்களாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கழுவேத்தி மூர்க்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

 

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாகக் கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையைச் செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்; அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்... கழுவேத்தி மூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார்வையற்ற பாடகிக்கு இசையமைப்பாளர் தமன் கொடுத்த வாக்குறுதி

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

Music composer Thaman promise to the singer

 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த சீசனில் இரு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த  இசையமைப்பாளர் தமன், கானா பாடலைப் பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஒளிபரப்பான ஒரு எபிஸோடில், நீலகிரியைச் சேர்ந்த புரோகிதஶ்ரீ எனும் பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால் பாடி அனைவரையும் அசர வைத்தார்.

Music composer Thaman promise to the singer

 

கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீயின் கதையைக் கேட்டு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இதே நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலைக் கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசிர்வாதத்தை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில் அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு பெரும் மாற்றத்தை, வாய்ப்பை வழங்கும் இசையமைப்பாளர் தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

 

 

Next Story

இருளுக்குள் அழைக்கும் அருள்நிதி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Demonte Colony 2  first look and Motion Poster released

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க, வெங்கி வேணுகோபால் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு அஜய் ஞானமுத்துவே இயக்கினார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

 

படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதல் பாகத்தில் வருவது போல் கண்ணில் கருவிழி இல்லாமல் தோன்றுகிறார். மோஷன் போஸ்டரிலும் இதே தோற்றத்துடன் தோன்றும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

 

மேலும் 'இருளுக்குள் வரவேற்கிறோம்' என்ற டேக் லைனுடன் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதி உட்பட டீசர், ட்ரைலர் அப்டேட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.