Skip to main content

"க்ரஷ் இருப்பது உண்மைதான், ஆனால் பேச தைரியம் இல்லை" - சாய் பல்லவி குறித்து பிரபல நடிகர்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Gulshan Devaiah about sai pallavi

 

சாய் பல்லவி 'கார்கி' படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சாய் பல்லவி மீது க்ரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசிய அவர், "எனக்கு சாய் பல்லவி மீது க்ரஷ் உள்ளது. அவரின் ஃபோன் நம்பரும் என்னிடம் உள்ளது. ஆனால், அவரை அணுகும் தைரியம் என்னிடம் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் நடனக் கலைஞர். இது ஒரு க்ரஷ் மட்டுமே. அதற்கு மேல் எதுவும் இல்லை. என் வாழ்க்கையில் எப்போதாவது அவருடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு விஷயம் நடக்கவிருந்தால் அது நடக்கும். அது நடக்கவில்லை என்றால் அது நடக்காது. ஆனால், ஒரு நல்ல நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். அதில் தவறில்லை" என்றுள்ளார். 

 

குல்ஷன் தேவய்யா பாலிவுட்டில் பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டு நடிகை கல்லிர்ரோய் டிசியாஃபெட்டா (Kallirroi Tziafeta) என்ற நடிகையை திருமணம் செய்தார். பின்பு 2020 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.