Skip to main content

"அதுவெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தது; தற்போது கவனமாக இருக்கிறேன்" - கௌதம் கார்த்தி பேட்டி 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Gautham Karthik

 

நடிகர் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக், நக்கீரன் ஸ்டூடியோவுடனான சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"நான் இங்கிலிஷ் சைக்காலஜிதான் படித்திருக்கிறேன். நடிகராக வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் மணி சார் என்னை அழைத்தார். நான் அவரைச் சென்று சந்திக்கையில் தமிழ் பேசுவியா என்று கேட்டார். நான் பேசுவேன் என்று சொன்னவுடன் சரி கிளம்பு என அனுப்பிவிட்டார். பிறகு அவருடன் இணைந்து கதை வேலைகள் செய்தேன். என்னை அவருடைய உதவி இயக்குநராக சேர்த்துள்ளார் என்றுதான் நினைத்தேன். ஒருநாள் ஒரு சீனைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். எனக்கே ஷாக்கிங்காக இருந்தது. நான் நடித்துக்காட்டியது அவருக்கு பிடித்திருந்ததால் கடல் படத்தில் என்னையே ஹீரோவாக்கிவிட்டார். 

 

என் தாத்தாவும் அப்பாவும் நடிகர்கள் என்ற எண்ணத்தை நான் வைத்துக்கொள்ளமாட்டேன். தாத்தா, அப்பா காலத்திய படங்களுக்கும் தற்போதைய படங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் அவர்களோடு மக்கள் என்னை ஒப்பிடமாட்டார்கள் என்பதால் அந்தச் சுமை எனக்கு இருந்ததில்லை. சிலர் தாத்தா மாதிரியே இருக்க என்றும் சிலர் அப்பா மாதிரியே இருக்க என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதை தவிர்க்கவும் முடியாது. என்னுடைய வேலையில் அப்பா தலையிட்டதே இல்லை. நான் உனக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றால் நீயாக எதையும் கற்றுக்கொள்ளமாட்டாய் என்று கடல் படத்தின்போதே அப்பா சொல்லிவிட்டார்.

 

ad

 

என் படத்தில் சாதியம் இருக்கிறது என்று அதிகமாகவே விமர்சனங்கள் வருகின்றன. நான் சாதி ஆதரவாளர் அல்ல. எனக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். நான் முதலில் நடித்த படங்களில் சாதி தொடர்பான விஷயங்கள் இருந்தது என்றால் அப்போது எனக்குத் தெரியவில்லை. தற்போது கேட்கும் கதைகளில் அப்படி எதுவும் இருக்கிறதா என்று மிகவும் கவனமாகக் கேட்கிறேன். தேவராட்டம் படம் ஆரம்பிக்கும்போது அப்படி ஆரம்பிக்கவில்லை. டைட்டில் தேவராட்டம் என்று போடும்போதுதான் இது சாதி படம் என்று பேச்சு வந்தது. நான் டார்கெட் பண்ணி அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை". 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல் படத்தில் இணைந்த கௌதம் கார்த்திக்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
gautham karthik in kamal thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தனர். கடந்த கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  

இப்படத்தில் விருமாண்டி புகழ் அபிராமியும், நாசரும் நடிக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Next Story

"நாம ஒத்துமையா இருந்தா எவனும் நம்மல அசைக்க முடியாது" - வைரலாகும் கௌதம் கார்த்திக் பட டீசர்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

hhjthjt

 

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோமல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. 

 

மேலும், இப்படத்தின் பின்னணி முடிந்து, படம் ரிலீஸுக்குத் தயாராகிவரும் நிலையில், இயக்குநர் நந்தா பெரியசாமி, ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் பி. ரங்கநாதன் பேசியபோது... "‘தர்மபிரபு' படத்திற்குப் பிறகு இது எனது இரண்டாவது படம். இயக்குநர் நந்தா பெரியசாமி முதலில் வேறொரு கதைதான் சொன்னார், ஆனால் அது எனக்கு சரிவரும் என  தோணாததால் வேறொரு கதை கேட்டேன். அப்படி இவர் சொன்னதுதான் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. 7 அண்ணன் தம்பிகளின் கதை. மிக வித்தியாசமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டு இப்படத்தை ஆரம்பித்தேன். மிக நல்லதொரு படமாக, இப்படத்தை நந்தா பெரியசாமி உருவாக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்றார்.  

 

இதை தொடர்ந்து இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியபோது... "இது பொதுமுடக்கத்திற்கு முன் துவக்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம், பெரும் தடைகள் பலவற்றைத் தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம். சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. பொது முடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்பு தந்தார். இப்படம் நன்றாக வர முழுமுதல் காரணமும் தயாரிப்பாளர்தான். தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும். ஒன்றாக இருக்கும், ஒரு குடும்பத்தில் சூழலால் வரும் பிரச்சனைகளை தாண்டி, அண்ணன், தம்பிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்று சேர்கிறான் என்பதுதான் கதை. ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். அவருக்கு நன்றாக தமிழ் தெரிந்திருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார். படப்பிடிப்புக்கு முதல் ஆளாக வந்துவிடுவார். படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம் போல்தான் இருந்தோம். படமும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும் உங்கள் ஆதரவை படத்திற்கு தாருங்கள்" என்றார்.

 

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், இத்திரைபடம் வரும் நவம்பர் மாதம் திரைக்குவரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.