Skip to main content

நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் திருப்பதியில்  தரிசனம்...

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

ஜகமே தந்திரம் ஷூட்டிங்கிற்கு பின்பு மாரி செல்வராஜ் படமான கர்ணன் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் முடிக்கப்பட்டு மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக ஒரு நீண்ட இடைவேளை எடுத்துள்ளது படக்குழு. 
 

dhanush

 

 

மேலும்  கடந்த வாரம் ஆனந்த எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டுவிட்டது. இப்படி  படு பிஸியாக ஷூட்டிங்கில் சுற்றி வரும் தனுஷ் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று பிராத்தனைகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் திருமலைக்கு வந்தார். அதன்பின் விஐபி தரிசனத்தில் காலை சாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து தேவஸ்தான அதிகாரிகள் சாமி பிரசாதத்தை கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட தனுஷ் கோவிலைவிட்டு வெளியே வந்ததும் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்