Skip to main content

"உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை...." நடிகை குஷ்பு பதிவு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

kushboo

 

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

இந்நிலையில், திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றை நேற்று பிறப்பித்தார். இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

அதே நேரத்தில், திரையரங்கில் 100 சதவிகித அனுமதி குறித்து சிலர் தங்களது மாற்றுக் கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்குவது குறித்து மாற்றுக்கருத்து உடையவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு பயம் இருந்தால் திரையரங்குகளுக்குச் செல்லாதீர்கள். உங்களது பயம் புரிகிறது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்