Skip to main content

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நடிகர் விஜய்யின் தந்தை கடிதம்! 

Published on 23/11/2020 | Edited on 11/01/2021
sac

 

 

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயின் பெயரில் கட்சியை பதிவு செய்யுமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இது, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் என பரபரப்பை கிளப்பிய நிலையில், தனக்கும் தன் தந்தையின் இயக்கத்திற்கும், எந்த தொடர்பும் இல்லையென்றும், தனது ரசிகர்கள் யாரும் அந்த இயக்கத்தில் சேர வேண்டாம் எனவும் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

 

இதனை தொடர்ந்து, எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த விஜயின் தயார் ஷோபா, அஸோஸியேஷன் ஆரம்பிப்பதாக கூறி தன்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாகவும், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஷோபாவை தொடர்ந்து, எஸ்.ஏ. சந்திரசேகரின் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிட்டிருந்த பத்மநாபனும், தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

 

இந்தநிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர், தனது கட்சியை பதிவு செய்யவேண்டாமென, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்