Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மேரிகோம் தோல்வி!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

mary kom

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

இந்தநிலையில் இன்று நடந்த போட்டிகளில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல், குத்துச்சண்டை ஹெவி வெயிட் பிரிவில் (+91 கிலோ) இந்திய வீரர் சதீஷ்குமார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தையில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இன்று முன்னேறினார்.

 

இந்தநிலையில், தற்போது நடைபெற்ற (51 கிலோ பிரிவு) குத்துசண்டை போட்டியில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், இந்தியாவின் மேரி கோம் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவிடம் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.