Skip to main content

டி20 உலகக்கோப்பை; இந்தியா முடிவெடுக்க ஐசிசி அவகாசம்...

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

ganguly

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த விரும்புகிறது.

 

இந்நிலையில், இந்தாண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்தலாமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றலாமா என்பது குறித்து முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பதைத் தெரிவிக்கக் கால அவகாசம் கோரினார்.

 

இதனைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவிலேயே நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதேநேரத்தில், 20 ஓவர் உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்துவது குறித்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை 20 ஓவர் உலகக்கோப்பையை நடத்துமிடம் மாற்றப்பட்டாலும், போட்டியை நடத்தும் உரிமை இந்தியாவிற்கே வழங்கப்படும் எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.