Skip to main content

நடராஜனைப் புகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

natarajan

 

தமிழக வீரர் நடராஜன், டி.என்.பி.எல், ஐ.பி.எல் ஆகியவற்றில், சிறப்பாக ஆடியதன் காரணமாக, இந்திய அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அறிமுகமான அவர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில், அறிமுகமான நடராஜன், மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தியா போட்டியை வெல்வதற்குக் காரணமாக அமைந்தார்.

 

இந்தநிலையில், 20 ஓவர் போட்டியில் நடராஜன் எடுத்த விக்கெட்டுகளை, யூ-ட்யூபில் பதிவேற்றியுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், அவரை 'யார்க்கர் கிங்' எனக் குறிப்பிட்டுள்ளது.

 

ஏற்கனவே, நடராஜனின் பந்து வீச்சையும், யார்க்கர் வீசும் திறமையையும் கபில்தேவ், வார்னர் உள்ளிட்ட பலர் புகழ்ந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவரை 'யார்க்கர் மன்னன்' எனப் புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.