Skip to main content

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது. 

Next Story

குழந்தை பாக்கியத்திற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?  - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன்  விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Murugu Balamurugan |Jothidam |

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு திருமணமான ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் விதியாக குழந்தை பாக்கியத்திற்கான அமைப்பு நன்றாக இருந்தால்தான் வாழ்வில் நல்ல காரியங்கள் விரைவில் நடக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் குழந்தை பிறக்கக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். இன்றைய சமுதாயத்தில் ஜாதக ரீதியாக பார்க்கிற பொழுது அந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது என்பது மிகவும் குறைவாக இருந்தது.  ஒரு ஆணுக்கு 23 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 20 வயதிற்குள் திருமணம் செய்து விடுவர். இன்று போகப் போக 25 வயதிலிருந்து ஒரு ஆணுக்கு திருமண வயது என்பது 30 என்றும், பெண்களுக்கு 25 - 27 என்று வந்துவிட்டது. அது மட்டும் இல்லாமல் தற்போது இருக்கக்கூடிய உணவுப் பழக்கங்கள் சுற்றுச்சூழல் ஆகியவை ஆரோக்கிய வேறுபாடுகளை உண்டாக்கி குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு சில இடையூறுகளை உண்டாக்கி விடுகிறது. 

ஆண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, குரு பகவான், மூன்றாம் வீடு, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியவை குழந்தை பாக்கியத்தை குறிக்கின்றன. பெண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, குரு பகவான், செவ்வாய், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியவை குழந்தை பாக்கியத்தை குறிக்கின்றன. ஒரு ஆண் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு குழந்தை பாக்கியத்தை குறிக்கிறது. ஐந்தாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும். அதாவது ஐந்தாம் வீட்டில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

அடுத்து குழந்தை பாக்கியத்திற்கான நவக்கிரகங்களில் புத்திரக்காரன் என்று வழங்கக்கூடிய குரு பகவான் ஆவான். எனவே குரு பகவான் பலமாக இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்கும். அதைத் தாண்டி மூன்றாம் வீட்டில் பார்க்க வேண்டும். மூன்றாம் வீடு ஆண்மை சக்தியையும் வீரியத்தையும் குறிக்கிறது. மூன்றாம் வீடு பலமாக இருந்தால், ஆண்மை குறைபாடுகள் இல்லாமல் குழந்தை பாக்கியம் உண்டாகும். அதுவே  பலவீனமாக இருந்தால் அவருக்கு ஆண்மை குறைபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் இருக்கும். 

அதுவே மூன்றாம் அதிபதியின் ஆட்சி உச்சத்தில் இருந்து குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் குழந்தை பாக்கியத்திற்கு வாய்ப்புகள் பலமாக இருக்கும். பொதுவாக குரு நல்ல ஸ்தானத்தை ரக சேர்க்கையோடு இருந்தால் ஒரு வளமான வாக்கியத்தை உண்டாக்கும். ஆனால் குரு வக்ர நிலையில் இருக்கும்பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைபாடுகள் உண்டாகும். குரு இருக்கக்கூடிய இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் சூரியன் வக்ரம் வரும்போது குருவும் வக்கிரம் பெறுவார். அதுவே ஐந்தாம் வீட்டில் குரு இருக்கும்பொழுது ஒன்பதாம் வீட்டில் சூரியன் வந்தால் குரு வக்ர நிவர்த்தி பெறும். அதேபோல சூரியன் இருக்கக்கூடிய கட்டத்திலிருந்து 6,7,8ல் குரு இருப்பது ஒரு பலவீனமான அமைப்பாகும். 

அடுத்து ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் பெறும்பொழுது அவர் ஜாதகத்தில் திருமண வாழ்க்கை இல்லற வாழ்க்கையில் ஒரு சில இடையூறுகள் ஏற்படலாம். மேலும்  உடல் ரீதியாக ஒரு சில குறைபாடுகள் கூட ஏற்படக்கூடிய நிலை உண்டாகி விடுகிறது. சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பொழுது இரண்டு டிகிரி அல்லது மூன்று டிகிரிக்குள் இருந்தால் இருவரும் இணைந்தாலே அஷ்ட தோஷம் என்று சொல்ல முடியாது. ஆனால் சூரியன், சுக்கிரன் ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் இணைந்தோ இரண்டு பேரும் ஒரே டிகிரி போல் இருந்தால் அது பாதிப்பு என சொல்லலாம். 

அதேபோல பெண் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் ஐந்தாம் வீடு. அப்படி குரு பகவான் நன்றாக இருந்து ஐந்தாம் அதிபதி ஒரு கேந்திர திரிகோண ஸ்தபதியாக  அமையப் பெற்றிருந்தால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக உண்டாகிவிடும். அதுபோல குரு பகவான் நல்ல ஸ்தானத்திலிருந்து வக்கிரனாகப் பெற மறுத்தால் உறுதியாக குழந்தை பிறக்கும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் மிக முக்கியமானதாகும். அப்படி இருந்தால் வளமான பலன்கள் கண்டிப்பாக உண்டாகும். செவ்வாய் கேந்திர திரிகோணத்தில் இருந்து ஒரு சுப கிரக கிரகத்தினோடு சேர்ந்திருந்தால் ஒரு வளமான பலன்கள் உண்டாகும். 

அதே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றிருந்தால் உடல் உபாதைகள், மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் உண்டாகக்கூடிய இடையூறுகள் ஏற்படும். மேலும் ஐந்தாவது வீட்டில் ஆண்கள் கிரகங்களுடைய ஆதிக்கம் பலமாக இருந்தால், அதாவது சூரியன், செவ்வாய், குரு போன்றவை ஆதிக்கம் நல்ல பலமாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை யோகம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. அதுபோல ஆண் - பெண் இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் வீட்டில் பெண் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் வலுவாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 

ஐந்தாம் வீட்டில் சனி, ராகு, கேது இருக்கும் போது சிறிதளவு பாதிப்பை உண்டாக்கும். ஆனால் அப்படி முழுமையாக சொல்ல முடியாது. அது கூடவே ஐந்தாம் வீட்டின் அதிபதியான புத்திரக்காரர்கள் வக்கிரம் பெறும் பொழுது ஆண் குழந்தை பாக்கியம் ஏற்படுத்துவதில் சில இடையூறுகள் ஏற்படும்.  ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு பலமாக இருந்து குரு பகவான் இருந்தால் அழகிய குழந்தை பிறக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஒரு திருமணமான தம்பதிகளுக்கு உடனே கேது சம்பந்தப்பட்ட தசா புத்திகள், ராகு சம்பந்தப்பட்ட தசா புத்திகள் நடந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இடையூறுகள் உண்டாகும். 

அதுபோக ஒரு ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தால் அந்த குலதெய்வத்தை வழிபட்டால் நல்ல பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதாவது குரு பகவான் வக்கிரம் பெற்றுவிட்டார் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட முடியாது. அது கூடவே சுக்கிரனின் நிலை சூரியனின் நிலை ஐந்தாம் அதிபதி நிலை மூன்றாம் அதிபதி நிலை வைத்து முடிவு செய்ய வேண்டும். ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு வக்கிரம் பெற்றால் 3 ஆம் அதிபதியான சூரியன் பலமாக இருந்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும். இது போன்ற காரணத்தால் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனே குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது.