Skip to main content

வலைத்தள பிரபலம் நிறைவேற்றிய சவால்கள்! - சர்ச்சை வீடியோ வைரல்! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Website Celebrity Fulfilled Challenges

 

கடந்த 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார், கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே. இதுபோன்ற ஒரு சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியிருக்கிறார், கச்சேரி கலைஞரான ஆலியா வைல்டர்மேன் என்ற வலைத்தள பிரபலம். அவரது  ‘சவாலான செய்கை’ தற்போது வைரலாகி வருகிறது. 

 

அப்படியென்ன சவால்விட்டார் ஆலியா வைல்டர்மேன்? 


‘ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதலில், பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தினால், என்னுடைய காதலன் என்னை அடிக்கும் வீடியோவையும், என்னுடைய நிர்வாண போட்டோவையும் வெளியிடுவேன்’ என்று பதிவிட்டிருந்தார் ட்விட்டரில். முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழக்க, நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டார் ஆலியா. இதனைப் பகிர்ந்தபோது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால், காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்’ என்று வாக்குறுதி அளித்தார். 

 

தற்போது  ‘இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன்..’ என்று வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 
இதுபோன்ற சவால்களும் வாக்குறுதிகளும் என்ன ரகமோ?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.