Skip to main content

மீண்டும் விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் - இலங்கை பெண்கள் நலத்துறை அமைச்சர் பரபரப்பு

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

SRILANKAN

 

 

 

இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வெளியே கிளம்பி வீட்டுக்கு வர தமிழீழ விடுதலை புலிகள் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இலங்கை யாழ்ப்பாணத்தில் அதிபரின் மக்கள் சேவை திட்ட விழாவில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசுகையில்,

 

 

 

தமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த அரசிற்கு நன்றி, இங்கு எல்லோருக்குமே தெரியும் விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்த்தோம் என்று.

 

வட கிழக்கு மாகாணங்களில் இன்றும் எங்கள் குழந்தைகள் நிம்மதியாக வீட்டை விட்டு வெளியேறி தனது வேலைகளை முடித்துக்கொண்டு நிம்மதியாக வீட்டிற்கு வந்தடையும் சூழல் வேண்டும் என்றால் திரும்பவும் இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்க வேண்டும்.  விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். அவரின் இந்த பேச்சு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்