Skip to main content

ஊர் சுற்றுவதற்காகக் கணவரைச் செல்லப்பிராணி ஆக்கிய மனைவி... மடக்கிப் பிடித்த போலீஸார்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

canadian woman walks on street with leash on husdand

 

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுவதற்காகப் பெண் ஒருவர் தனது கணவரை நாய் போல வாக்கிங் கூட்டிச்சென்ற சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. 

 

கனடாவின் கியூபெக் நகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரவு எட்டு மணி முதல் அதிகாலை ஐந்து மணிவரை மக்கள் சாலைகளில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவசர காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வாக்கிங் கூட்டிச்செல்பவர்கள் மட்டும் இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

 

இந்தச் சூழலில், கியூபெக்கின் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது, அவரது கணவரின் கழுத்தில் நாயைப் போலச் சங்கிலியை மாட்டி, அதனைப் பிடித்தபடி அவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் ஊரடங்கு விதிகளை மீறுவதைக் கண்ட போலீஸார், அவரை மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், "சட்டப்படி செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லலாம். அதைத்தான் நான் செய்கிறேன்” என போலீஸாருக்குப் பதிலளித்துள்ளார். பெண்ணின் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன காவலர்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து ரூ. 1.72 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.