Skip to main content

வேங்கை வயல் சம்பவம்; ஒருவருக்கு சிபிசிஐடி சம்மன்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
 Vengaivayal incident-CBCID summons one

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற இழி செயலை மனித தன்மை கொண்டவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். யாரோ மனிதத்தன்மையற்ற சமூக விரோதிகள் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேங்கை வயல், இறையூர் கிராம மக்களும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.

முதலில் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் பிறகு நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர் உட்பட பல கிராமங்களில் உள்ள சந்தேக நபர்கள் அழைத்து விசாரணை செய்தனர். தொடர்ந்து செல்போன்கள் ஆய்வு, டிஎன்ஏ பரிசோதனை, குரல் பதிவு சோதனைகளும் நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது. விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நபர் ஒரு சீருடைப் பணியாளர் என்பதும் ஏற்கனவே பல விசாரணைகளுக்கு ஆஜரானதுடன் குரல் மாதிரி சோதனைக்கும் சென்று வந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்மன் பற்றிய தகவல்கள் பல்வேறு விதமாக வெளியே பரவி வருகிறது. வழக்கு விசாரணை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இன்னும் சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேங்கை வயல் சம்பவம்; அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
vengaivayal incident; CBCID seeking time

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விசாரணை 545 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தற்பொழுது இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. வருகின்ற மூன்றாம் தேதிக்குள் (ஜூலை 3) இந்த வழக்கை முடிக்க சென்னை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது.  அதனடிப்படையில் ஜூலை மூன்றாம் தேதி இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். இந்த அதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்துதல்; வழக்கு என்ன நிலையில் இருக்கிறது; வழக்கு முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.

Next Story

கள்ளச்சாராயத்தில் கலந்திருந்தது மெத்தனால் மட்டுமல்ல - அதிர்ச்சியூட்டும் புது தகவல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 It is not just methanol that was mixed in fake liquor - new information

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 It is not just methanol that was mixed in fake liquor - new information

இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷத் தன்மை ஏற்பட்டது தொடர்பான தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் மெத்தனால் மட்டுமல்லாது டர்பைன்டைன் ஆயிலும் கலக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கிய நிலையில் அவரிடம் இருந்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மெத்தனாலை வாங்கி கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தியது தெரிய வந்திருந்தது. இந்தநிலையில் புதுச்சேரியிலும் மெத்தனால் விற்பனை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

மாதேஷ் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலமாக மெத்தில் டர்பன்டைன் ஆயில் என்கின்ற வேதிப்பொருளை 10 கேன்களில் வரவழைத்திருக்கிறார். அந்தக் கேன்கள் விருத்தாசலத்தில் உள்ள ஒரு செராமிக் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த நிறுவனம் ஜோதி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. அதில் இரு கேன்களை மாதேஷ் பெற்றுக் கொண்டதாகவும், சின்னதுரைக்கு அந்தக் கேன்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளச்சாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கேசவன் என்ற இருவரைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.