இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியதோடு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருபவர்கள் மீதும், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சாலைகள் காவல்துறையினர் பல நேரங்களில் எச்சரிக்கையும் வழக்குப்பதிவும் செய்துவருகின்றனர். நேற்று சென்னை, அண்ணா சாலையில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நாற்காலியில் அமர்வது போன்று நிற்கவைத்து தண்டித்ததோடு இனி வெளியில் வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.