Skip to main content

கால்வாயில் இருந்த சிவனடியாரின் சடலம்; வெளியான பகீர் வாக்குமூலம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

two man incident his friend while drunk in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருப்புசாமி புதூர். இங்குள்ள அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத அளவில் சிவனடியார் வேடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

 

இதற்கிடையில், சடலமாக இருந்தவரின் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்தக் காயம் இருந்துள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், இறந்து கிடந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மதியழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த போலீசார், அவர் தங்கியிருந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இருவரும், பல்வேறு உண்மைகளைக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட போலீசார் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

கொலை செய்யப்பட்ட மதியழகனும் பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதியன்று மதியழகன், பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம், போதையில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது, தலைக்கேறிய போதையில் இருந்த மதியழகன் ஸ்ரீமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் அங்கிருந்த கட்டையால் மதியழகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அது போதாதென்று பக்கத்தில் இருந்த கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இதற்கிடையில், தாங்கள் அடித்ததில் மதியழகன் இறந்துவிட்டதால் ஸ்ரீமுருகனுக்கும் பட்டுப்பாண்டிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதியழகனின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, மதியழகனின் உடலை ரெக்சின் கவரால் சுருட்டி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கருப்புசாமிபுதூர் பகுதிக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இருவரும் தப்பித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து, ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.