Skip to main content

பட்டாக்கத்தியுடன் அலப்பறை; பொதுமக்கள் பீதி - ரவுடிக்கு கை, கால் முறிவு

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
 raider who was involved in the raid with a machete was arrested

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை இரவு வில்லாளி தொட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்று உள்ளது. பிறந்த நாள் விழாவிற்கு போதையில் பட்டாக்கத்தியுடன் பல ரவுடிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு சினிமா பாடலுக்கு பட்டாக்கத்தியைக் கையில் ஏந்தியவாறு நடனம் ஆடி உள்ளனர். பின்னர் போதையில் அங்கு ரகளையில் ஈடுபட்டு நாற்காலிகளைத் தூக்கி வீசி  மண்டபத்தில் இருந்தவர்களிடம் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர் 

இந்த நிலையில் அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே வந்து ஓர் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு கடலூரை நோக்கி சென்றனர். அப்போது பின்னால் இருந்த ஒருவர் பட்டாக் கத்தியை நீட்டி சுழற்றி பொதுமக்களை மிரட்டி தரையில் நெருப்பு பொறி வரும் வகையில் நடந்துள்ளார். அவ்வழியாக வந்த திருப்பாப்புலியூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான சன் பிரகாஷை வழிமறித்து ஆபாசமாக பேசி வெட்டி உள்ளனர். இதில் அவருக்கு வாய் மற்றும் மூக்கு பகுதியில் வெட்டுப்பட்டு கீழே விழுந்துள்ளர். அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்து கிழே விழுந்த சன் பிரகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்த திருப்பாப்புலியூர் காவல் துறையினர் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்டது, ரவுடி சூர்யா, பண்ருட்டி நசனுர் ஜெயமூர்த்தி மகன் விக்கி என்ற விக்னேஷ், விலாசம் தெரியாத ஒருவர் ஆகிய மூன்று பேர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து சூர்யாவை காவல்துறையினர் நேற்று இரவு(25.7.2024) கைது செய்து பட்டாகத்தியை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை எடுப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது ரவுடி சூர்யா கத்தியை கொடுப்பது போல் காட்டி காவல்துறையினரை மிரட்டி கெடிலம் தடுப்பணையில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் 3 வாலிபர்களும் பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியுடன் ஆட்டம் போட்டுவிட்டு கத்தியை சுற்றியபடி சாலையில் சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில்  இவர்கள் அவரது நண்பர் காமராஜ் என்பவரை கொலை செய்த போது பிரகாஷ் வேடிக்கை பார்த்ததாகவும் அதனால் பிரகாஷை வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்