Skip to main content

சென்னையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு (படங்கள்)

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள ரெம்ஸ் தெருவில் அமைந்திருக்கும் விஜய் சாந்தி அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடந்துகொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்