Skip to main content

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

kl


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த  நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மழை இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் பாதிப்பு பகுதிகளை இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். 

 

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது போல் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்