Skip to main content

சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட கிலோ கணக்கான தங்கம்..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Kilograms of gold smuggled in a special plane ..!
                                          மாதிரி படம் 


சார்ஜாவில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானங்கள் திருச்சிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று (22.06.2021) ஏர் இந்தியா விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. அதில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது உடைமைகளுக்குள் மறைத்துவைத்துக் கொண்டுவரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கொண்டுவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்