Skip to main content

காவல்துறை மூலம் பக்தர்கள் மீது வன்முறையை கட்டவிழ்கிறது கேரள அரசு-எச்.ராஜா குற்றச்சாட்டு

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

 

h raja

 

பினராயின் அரசு நீக்கப்பட்டதால் ஐயப்பன் கோவில் விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என ஹச்.ராஜா கூறியுள்ளார்.

 

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  பேசுகையில்,

 

காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். ஊடங்களில் அது தொடர்பான புகைப்படங்களும் வந்துள்ளன. போலீசாரே பக்தர்களை கல்லை கொண்டு தாக்குகிறார்கள். என்னை கேட்டால் பினராயி விஜயன் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். இன்று அங்கு பலபேர் கிருஸ்துவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் எப்படி கோவிலுக்கு போக முடியும். இந்து விரோத வன்முறை கலவரத்தை தூண்டிக்கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் முடிவுக்கு வந்தால்தான் ஐயப்பன் கோவிலுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.  

சார்ந்த செய்திகள்