Skip to main content

நடந்துசென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி அறுப்பு!

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
நடந்துசென்ற பெண்ணிடம்  தாலி சங்கிலி அறுப்பு! 

சிதம்பரம் வாகீசநகரில் வசித்து வருபவர் குமரகுருபரன். இவரது மனைவி கிருபா வயது 30. இவர் சிதம்பரம் நகர் புதுத்தெருவில் நடந்து சென்றுகொண்டு இருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேர், கிருபாவின் கழுத்தில் அணிந்து இருந்த 15 பவுன் எடையுள்ள செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது சம்பந்தமாக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்