Skip to main content

தரை தட்டிய படகுகள்; 300 மீட்டர் உள்வாங்கிய கடல்

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
flat boats; 300 meters indented sea

வங்கக் கடலில் உருவான 'ரிமால்' புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிமால் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரையை ஒட்டிய பகுதியில் ரிமால் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் ரிமால் புயல் எதிரொலியாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காற்றின் போக்கின் காரணமாக உட்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றினுடைய போக்கு மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பநிலை இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிமால் புயல் எதிரொலியாக ராமநாதபுரத்தில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்கடல் எதிரொலி; தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
  Sea rage in Dhanushkodi

கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக் கடல் எச்சரிக்கை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும், 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் மக்கள் யாரும் கடல் பகுதிகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்றே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், கடற்கரைப் பகுதிகளில் இறங்கவும் குளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். நேற்று இரவு முதல் வழக்கத்திற்கு மாறாக காணப்படுகிறது. சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காமல் கடற்கரை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.

Next Story

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொறுங்கிய ஆட்டோ-இருவர் காயம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Auto crushed by bus - Two injured

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும், பயணிகள் ஆட்டோவும் மோதிக் கொண்டதில் ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வளைவில் திரும்பும்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர். சித்தார்கோட்டை வழியாக அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பிய போது ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய ஆட்டோ முழுவதுமாக சேதமடைந்தது. அதேநேரம் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்கம்பமும் சேதமடைந்தது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.