Skip to main content

கடலூர் : தற்காலிக நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
கடலூர் : தற்காலிக நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 8 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்கியது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் விபத்துகள் ஏற்பட்டன. அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் தற்காலிக நடத்துனராக பணியிலிருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி வந்த அரசு பேருந்தின் தற்காலிக நடத்துனர் நஜிபுதீன்(35) மாரடைப்பால் காலமானார். குறிஞ்சிப்பாடி பஸ்நிலையம் அருகிலேயே உயிரிந்தார். இவர் வடலூர் அருகே உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர்.  உயிரிழந்த நடத்துனரின் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்