TAMILNADU ASSEMBLY CHIEF MINISTER MKSTALIN EXPLAIN

திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (04/05/2022) விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநில குற்ற புலனாய்வு துறையின் புலன் விசாரணை அறிக்கையைப் பெற்றவுடன் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டதடையை நீக்கக்கோரி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

Advertisment

இந்த தீர்மானத்திற்கு அ.தி.முக., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது.