Skip to main content

சென்னை ஸ்தம்பித்தது; மின்சாரம், ரயில்சேவை, ஆட்டோ சேவை துண்டிப்பு

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
சென்னை ஸ்தம்பித்தது; 
மின்சாரம், ரயில்சேவை, ஆட்டோ சேவை துண்டிப்பு

கொட்டித்தீர்க்கும் தொடர் கனமழையினால் சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

 சாலையெங்கும் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.   

பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.  தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவை பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.  

 தாம்பரம் சாணிட்டோரியம் இருப்புப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

 சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஆட்டோ சேவையும் துண்டுக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்