Skip to main content

நான்கு உயிரை பலி வாங்கிய கார்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

The car that killed four lives

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று துபாயிலிருந்து விமானத்தில் வருகை தந்த சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் காரில் ஆத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்தக் கார் விக்கிரவாண்டி புறவழிச்சாலை அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னதச்சூரைச் சேர்ந்த செல்வம், விக்கிரவாண்டி கக்கன் நகரைச் சேர்ந்த தயாளன், அவரது மனைவி சந்திரா, மணிகண்டன் ஆகிய மூவரும் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

 

சென்னையிலிருந்து ஜெயபாலன் ஓட்டி வந்த கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சர்வீஸ் சாலையில் ஓரமாக பேசிக்கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதிவிட்டு சாலையோரம் இருந்த வயல்வெளியில் போய் இறங்கி நின்றது. இந்த விபத்தில் செல்வம், தயாளன், அவரது மனைவி சந்திரா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தயாளன் தம்பதியருடன் பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், காரை ஓட்டி வந்த ஜெயபாலன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இதில் மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் காரில் பயணம் செய்த ஜெயபாலனின் அக்கா, அவரது மகள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

 

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனே விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, டி.எஸ்.பி ரவீந்திரன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் நாயக்கர்கள், சப்-இன்ஸ்பெக்டர் பழனிநாதன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு அய்யனார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அப்பாவிகள் நான்கு பேர், தறிகெட்டு ஓடிய கார் மோதி உயிரிழந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.