Skip to main content

திரு.வி. கலியாணசுந்தரனார் 138வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

138th Birthday of Mr. V. Kaliyanasundaran - Ministers pay floral tributes!

 

தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனாரின் 138வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில், அவர் பிறந்த ஊரான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரவாயல் வட்டம், துண்டலம் கிராமம், செட்டியார் அகரம், திரு.வி.க. நூலகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் க. கணபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் செ. சரவணன் இ.ஆ.ப., செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்