Skip to main content

“தவழ்ந்து வந்த பழனிசாமியைத் தட்டிக் கொடுத்து முதல்வர் பதவியைக் கொடுத்தது யார்?” - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

"Who knocked down the creeping Palaniswami and gave him the post of chief minister?" O. Panneerselvam Question

 

அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க ஓபிஎஸ் வாக்களித்தார்” எனக் குற்றம் சாட்டினார். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழலில் நான் தர்ம யுத்தத்தைத் துவங்கி இருந்தேன். யாருக்காகத் தர்மயுத்தம். யாருக்கு எதிராக என்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சூழ்நிலையில் பழனிசாமி முதல்வராக இருந்தார். பழனிசாமி முதல்வராக இருந்ததை எதிர்த்துத்தான் வாக்களித்தேன். இதை ஏற்கனவே பல கூட்டத்தில் கூறியுள்ளேன். அதற்குப் பின் வேலுமணி, தங்கமணி ஆகியோர் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார். அப்படி அவர் கொண்டு வரும்பொழுது திமுக மற்றும் டிடிவி உடன் உங்கள் ஓட்டும் சேரும்பொழுது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள். 

 

அந்தச் சூழலில்தான் பழனிசாமி தரப்பினரும் சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டனர். இந்நிலையில் டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு நான் ஆதரவளித்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அரசு 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டதற்கு நான் தந்த ஆதரவுதான் காரணம் அதுதான் உண்மை. அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நான்கரை வருடங்கள் அவர் செய்த ஜனநாயக விரோதச் செயல்களை, என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று செயல்பட்டதை உங்கள் முன்னால் சொல்லுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன். பட்டியல் போட்டும் வைத்துள்ளேன். உரிய நேரத்தில் அவை வெளியிடப்படும். 

 

துணை முதலமைச்சர் என்ற பதவியை எடப்பாடி எனக்குத் தந்தாராம். அவருக்கு முதலைச்சர் பதவியைக் கொடுத்தது யார். தவழ்ந்து வந்த பழனிசாமியை எழுப்பிவிட்டுத் தட்டிக் கொடுத்து முதல்வர் பதவியை அவருக்குத் தந்தது யார். சசிகலா.  அந்த சசிகலாவை இவர் எந்த அளவிற்கு விமர்சனம் செய்தார். ஆகவே நம்பிக்கைத் துரோகி யார் என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது.” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.