Skip to main content

''இதில் சரி செய்யப்பட வேண்டியது திமுகவின் அரசியல் தலையீடு தான்''-அண்ணாமலை பேட்டி!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

BJP

 

சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில் கைதி ராஜசேகர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''முதலமைச்சர் சொன்னார் காவல் துறைக்காக ஒரு ஆணையத்தை அமைக்கிறோம் என்றார். சொன்னபடி அமைத்தார்கள். ஆனால் அந்த ஆணையத்தில் என்ன கொடுமை என்றால் எந்த ரிட்டயர்டு ஜட்ஜை போட்டார்களோ அந்த நீதிபதியுடைய பாதுகாப்பு காவலரையே ரோட்டில் வெட்டிக் கொலை செய்துவிட்டு போய்விட்டார்கள். அதன்பிறகு அந்த ஆணையத்தின் நிலைமை என்ன?. காவல்துறையினருடைய பணிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த அரசு என்னவிதமான திட்டங்களை கையில் எடுத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று, காவல்துறையினரே தவறு செய்கிறார்கள். அரசியல் தலையீடு காரணமாக தவறு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பணிச்சுமை காரணமாக இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.

18 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும், மேலதிகாரிகள் வேகமாக குற்றவாளியை பிடித்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி சிறைக்கு அனுப்ப வேண்டும் என பிரஷர் கொடுப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதுதொடர்பாக எப்படிப்பட்ட தற்காலிக தீர்வுகளை முதல்வர் அறிவிக்கப் போகிறார். குறிப்பாக போலீசாரின் மனஉளைச்சலை குறைப்பதற்கு என்ன செய்யப்போகிறார் என்பதை முதல்வர் சொல்லவேண்டும். ஆளுங்கட்சியின் தலையீடு காவல்துறையில் அதிகமாக இருக்கிறது. நேற்று மாலை ஒருவர் விசாரணை கைதியாக உயிரிழந்துள்ளார்.இன்று ஒருவர் விசாரணை கைதியாக இறந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏழு லாக்கப் மரணங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது காவல்துறை, எனவே முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பதிலாக டிஜிபி அவர்களோ, காவல் ஆணையர் அவர்களோ பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் தகவல்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

 

சாத்தான்குளத்தில் காவலர்கள் நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தற்போதைய முதல்வர் அந்த நேரத்தில் அதனை எப்படிப்பட்ட அரசியலாக மாற்றினார் என்பதை பார்த்தோம். ஆனால் இப்பொழுது நிகழ்ந்துள்ளதை அரசியலாக்கவில்லை நடந்த தவறை மட்டுமே கேட்கிறோம். ஏன் இந்த தவறு நடந்தது? ஒருமுறை தவறு நடந்தது, இரண்டாவது முறை இதே தவறு நடக்காமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தீர்கள். சிறையில் கைதிகள் மரணமடைவது மட்டுமல்லாது ஒருபக்கம் காவல்துறையின் செயலின்மையும் குறிப்பிடத்தகுந்தது. ரோட்டிலேயே கொலைகள் நடப்பது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வது. இதுபோன்ற பெரிய பெரிய குற்றங்கள் காவல்துறையின் செயலின்மையைக் காட்டுகிறது. தமிழக காவல்துறை பொறுத்தவரை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறது. பல்லை பிடுங்கியது திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் எனும் பாம்பாட்டிகள். எனவே இதில் சரி செய்யப்பட வேண்டியது திமுகவின் அரசியல் தலையீடு தான்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.