Skip to main content

கோவிஷீல்ட் கோவாக்சினை மாற்றி செலுத்திக்கொள்வது மிகவும் தவறு - சீரம் நிறுவன தலைவர்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

serum chairman

 

உலகம் முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனையொட்டி வெளிநாடுகளில் முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக ஒரு தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. சில ஆய்வுகளின் முடிவுகளும் வெளிவந்துள்ளன.

 

இந்தியாவில் இதுபோன்று தடுப்பூசிகளை மாற்றி செலுத்திகொள்வது தொடர்பாக இதுவரை எந்த ஆய்வும் நடைபெறாத நிலையில், கடந்த 11 ஆம் தேதி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்து ஆய்வு நடத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்தார்.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது மிகவும் தவறானது என சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது மிகவும் தவறானது என நான் நினைக்கிறேன். அதுபோன்று மாற்றி செலுத்திக்கொள்வது பயனளிக்கும் என்பது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. தடுப்பூசியை மாற்றி செலுத்திக்கொள்வது தேவையில்லை . எதாவது தவறாக நடந்தால், இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவோம். சீரம் நிறுவனம் அந்த தடுப்பூசி சரியில்லை என கூறும். அந்த நிறுவனம் எங்கள் தடுப்பூசியில் பிரச்னையுள்ளது என தெரிவிக்கும்"  என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.