Skip to main content

147 நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்த கரோனா பாதிப்பு!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

hjk

 

இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 373 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று (09.08.2021) ஒரே நாளில் 32,968 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.19 கோடி பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 3.11 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3.88 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். இதுவரை 51.09 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 51.11 லட்சம் தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் 147 நாட்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 29 ஆயிரத்துக்கும் கீழாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்