Skip to main content

இந்தியாவில் கரோனாவுக்கு 50 பேர் பலி !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834 லிருந்து 1,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 144-லிருந்து 151 ஆனது. 
 

INDIA CORONAVIRUS STRENGTH INCREASED


அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 335, கேரளா- 265, தமிழகம்- 234, கர்நாடகா- 110, ராஜஸ்தானில்- 108 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்