Skip to main content

'நான் ஏன் கட்டணும்; அரசு இலவசமா தருது...' - மின் வாரிய அதிகாரிகளைத் தாக்கிய வாலிபர் 

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

bangalore viral video eb bill pending related issue 

 

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குக்கன்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சந்திரசேகரையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 6 மாதங்களாகத் தனது வீட்டின் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மின்சார வாரியத்தில் இருந்து மின்துறை அதிகாரிகள் சந்திரசேகரையா வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும் அவர் 9 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வைத்துள்ள நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு சந்திரசேகரையாவிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், நான் மின்சார கட்டணத்தைச் செலுத்தமாட்டேன். வீடுகளுக்கு மின்சாரம் இலவசம் என்று அரசு அறிவித்து விட்டது எனக் கூறி மின்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறும் செய்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் மின் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால், நேற்று மின்சாரத்துறை அதிகாரிகள் இருவர் அவரது வீட்டில் மின்சார இணைப்பைத் துண்டிக்கச் சென்றுள்ளனர். அப்போதும் அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவரையும் சந்திரசேகரையா தாக்க முயன்றார்.

 

இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரய்யாவை கைது செய்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.