Skip to main content

ஆம் ஆத்மி முன்னிலை- டெல்லி மக்களுக்கு பிரசாந்த் கிஷோர் நன்றி

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துவரும் நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாத் கிஷோர் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

AAP leading-Prashant Kishore thanks to the people of Delhi

 

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. 12.09 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 39.31  சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.10  சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்து கொடுத்திருந்தார் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர். தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி தற்போது முன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற உறுதுணையாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி என பிரசாத் கிஷோர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்