Skip to main content

அமெரிக்காவின் மூத்தகுடியின் இதயம் பெரிதாக இருப்பது ஏன்?

Published on 10/11/2018 | Edited on 12/12/2018

அமெரிக்காவுக்குள் மனிதர்கள் எப்போது நுழைந்திருப்பார்கள் என்பதில் பல குழப்பமான முடிவுகள் இருந்தன. சைபீரியா மற்றும் கிழக்கு ஆசியாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் கடந்த பனிக்கட்டிக் காலத்தில் பெரிங் நீரிணை வழியாக வட அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.

 

aa

 

 

பெரிங் நீரிணை மட்டுமல்ல வட அமெரிக்காவின் பெரும்பகுதி பனியாய் உறைந்திருந்தது. அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் வட அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இன்னொரு பிரிவினர் தென்னமெரிக்காவுக்குள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.

 

 

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் மோண்டி வெர்டே என்ற இடத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஆயுதம் கிடைத்தது. அது 14 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.

 

 

இப்படி தென்னமெரிக்காவில் பயணித்த மூத்தகுடியினர் ஆண்டிஸ் மலையின் உச்சியில் குடியேறினர். வேட்டைக்காரர்களாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர்கள், பிறகு மலைப்பகுதியிலே ஓரிடத்தில் கூட்டமாக வாழத் தொடங்கினர் என்கிறார்கள்.

 

 

j

 

 

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலை உச்சியில் இப்போது வாழும் பூர்வ குடிகளின் இதயம் விரிவடைந்து பெரிதாகவும், சற்று கூடுதலான ரத்த அழுத்தத்துடனும் வாழ்கிறார்கள். அதாவது ஆண்டிஸ் மலையின் உச்சியில் வாழ்வதற்கு ஏற்றபடி அவர்களுடைய உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது பூர்வகுடிகள் மலை உச்சியிலும் சமவெளியிலுமாக மாறிமாறி வாழ்ந்ததை மாற்றி, உயரமான மலைகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கிய பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

 

இவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மலையுச்சியில் வாழத் தொடங்கியிருப்பார்கள். இவர்களுடைய மரபணுக்களை ஆய்வு செய்தால் அந்த காலகட்டத்தை முடிவுசெய்யலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூத்தகுடிகள் ஆண்டிஸ் மலையில் வேட்டையாடி, கூடி வாழும் கூட்டத்தினராய் இருந்திருக்கலாம். 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மலையிலேயே வசிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

 

 

மூன்று வேறுபட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களுடைய புதைக்கும் இடத்திலிருந்து எலும்புகளில் இருந்து மரபணுக்களை சேகரித்தனர். 8 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சோரோ மிகயா பாட்ஜ்ஸா என்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணுவை சேகரித்தனர். பிறகு, 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விவசாயத் தொழில் செய்த கூட்டத்தைச் சேர்ந்த கைலாசுரோ என்ற கலாச்சார மக்களின் மரபணுவும், ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முந்தைய ரியோ அன்கல்லேன் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணும் கிடைத்தது.

 

 

அதைத்தொடர்ந்து, இந்த மூன்றுவகை மரபணுக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். சமவெளிகளில் வசிக்கும், பழங்கால, நவீனகால தென்னமெரிக்க மக்களின் டிஎன்ஏவையும், மலையுச்சியில் வசிக்கும்  பூர்வீக அமெரிக்கர்களின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டனர். முடிவில், மலையுச்சியில் நிரந்தரமாக மக்கள் குடியிருக்கத் தொடங்கிய காலம் 8 ஆயிரத்து 750 ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளனர். மலையுச்சியில் வாழ்ந்தவர்களின் உடல்கூறு மாற்றத்துடன் அவர்கள் அதிக அளவில் ஸ்டார்ச்சை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மலையுச்சியில் வாழ்ந்த பூர்வகுடிகள் சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிரிட்டு உணவாகக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், மலையடிவாரத்தில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடியே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

 

 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.