Skip to main content

களத்தில் இறங்கிய திமுக...பாமகவை வைத்து சமாளிக்கும் அதிமுக...வெற்றி யாருக்கு?

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

அ.தி.மு.க. முத்தமிழ்ச் செல்வன், தி.மு.க. ந.புகழேந்தி, நாம் தமிழர் கட்சி கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி கௌதமன் உட்பட 18 பேர் களம் காண்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க.வில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதுமே இரண்டு பெரிய கட்சிகளிலும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சூடு பறக்க ஆரம்பித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே 39 பறக்கும் படையையும் 319 கண்காணிப்புக் குழுவையும் களத்தில் இறக்கினார் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன். பறக்கும் படையும் கண்காணிப்புக் குழுவும் எஸ்.பி.ஜெயக்குமாரின் நேரடி கண்ட்ரோலில் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர ஆந்திராவிலிருந்து சிறப்புப் பார்வையாளர்களும் வருகின்றனர்.

 

election



இந்த ஏற்பாடுகளையெல்லாம் தேர்தல் கமிஷன் ஆரம்பிப்பதற்கு முன்பே, பணப்பட்டுவாடாவிற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக செய்து முடித்துவிட்டார் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். பறக்கும் படையின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு கரன்சி லோடு போய் சேர்ந்துவிட்டது. ஆளும் கட்சியின் கிளைச் செயலாளர்களை நன்றாகவே கவனித்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். அதே சமயம் ஆளும் கட்சி மீதான அதிருப்தியால் மைனஸ் ஆகும் ஓட்டுக்களை பா.ம.க. மூலம் சரிக்கட்டிவிடலாம் என்ற தெம்புடன் வலம் வருகிறார் அமைச்சர்.


விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் போட்டியாளராக இருப்பவர் மாஜி அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான பொன்முடி. இத்தொகுதியின் தேர்தல் என்பது மேற்படி இருவருக்கும் இடையிலான போட்டியாகத் தான் உள்ளது. ஆலோசனைக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்திருந்தாலும், இன்னும் கைக்கு எதுவும் வரலையே என்ற குரல்கள், கடந்த 30-ஆம் தேதி வரை உ.பி.க்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

"நம்ம கேண்டிடேட் நாமினேஷன் தாக்கல் பண்ணி முடியட்டும், அதுக்குப் பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்' என உ.பி.க்களுக்கு பொன்முடி தெம்பூட்டியிருப்பதால், தி.மு.க. முகாமில் உற்சாகம் தெரிகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய ஊர்களில் இருக்கும் லாட்ஜுகள், வாடகை வீடுகள் எல்லாமே ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிக்குழுவினரால் நிரம்பி வழிகிறது. முதல்வர் எடப்பாடி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சார வருகைக்குப் பின், விக்கிரவாண்டியில் விறுவிறுப்பு அதிகமாகும்.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.