Skip to main content

அஜித்தின் குரலாக ஒலித்த விக்ரம்!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

ஏப்ரல் 17 - நடிகர் விக்ரம் பிறந்தநாள் 

இந்திய சினிமாவின் பெருமை என்று ஒரு சிலரை சொல்வார்கள். அந்த நபர்களில் ஒருவராக இருப்பவர் சீயான் விக்ரம்.
 

vikram



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதைக்கு ஏற்றது போல் தனது உடலையும், தனது தோற்றத்தையும் மாற்றக்கூடியவர் என்றால் கமலுக்கு பின்பு நடிகர் விக்ரம் என்று உறுதியாகச் சொல்லலாம். நடிகர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,போட்டோகிராஃபர் என்று பன்முக திறன்கொண்டவர் விக்ரம். இவரது திரைப்பயணம் 1990ஆம் ஆண்டு தொடங்கினாலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'சேது'தான் விக்ரமின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன் என்று தமிழ் திரையுலகை ஒரு புயலாக சூழ்ந்தார் விக்ரம். 

இன்று துருவநட்சத்திரம் டீசரில் மிரட்டும் விக்ரமின் குரல் இப்பொழுது மட்டுமல்ல அப்பொழுதும் ஸ்பெஷல். நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்ரமுக்கு அதற்கு முன் சினிமாவில் கடினமான ஒரு காலகட்டம் இருந்தது. அப்பொழுது நடிகராக படங்கள் நடித்த பொழுதே தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் அஜித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம். அவ்வாறு விக்ரமின் குரல் விளையாடிய சில படங்கள்...  
 

அமராவதி அர்ஜுனுக்கு 

 

ajith ypung



இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள, 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்திற்கு 1993ஆம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில் அஜித் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் சீயான் விக்ரம்தான். அந்தப் படத்தில் அஜித்தின் அப்பாவித்தனமான இளம் காதலர் பாத்திரத்துக்கு விக்ரமின் குரல் முழுமை கொடுத்தது. இவ்வளவு நடிப்பை தனக்குள் வைத்திருப்பவரின் குரலும் நடித்தது. சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு காட்சியில் வருவார். அதிலும் அஜித்துக்கு டப்பிங் பேசியிருப்பார் விக்ரம்.
 

"கண்ண பாக்காதடா" 

 

minsara kanavu



நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவிற்கு இரண்டு படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான வெற்றிப்படமான 'காதலன்' மற்றும் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சாரக் கனவு' திரைப்படத்திற்கும் விக்ரம் டப்பிங் பேசியுள்ளார். மின்சாரக் கனவில் கஜோலின் காதலை மறுக்கும் அந்த கடல் காட்சியில் "கண்ண பாக்காதடா... ஏங்க எல்லா பொண்ணுங்களும் எனக்கு சிஸ்டர்ஸ்" என்று திணறும் அந்தக் காட்சி இன்றும் மறக்க முடியாதது. அதில் பிரபுதேவாவுக்கு உறுதுணையாக இருந்தது விக்ரமின் குரல். அந்த ஒரு காட்சிக்கு டப்பிங் செய்ய விக்ரம் அழைக்கப்பட்டிருந்தார்.   

 

சாக்லேட் ஹீரோவுக்கு சீயான் 

 

abbas



விக்ரம், மொத்தமாக 11 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதில் அதிகமாக அவர் டப்பிங் பேசியது இப்பொழுது ஹார்ப்பிக் பாயாகவும் அப்பொழுது பெண்களின் மனதில் சாக்லேட் பாயாகவும் இருந்த அப்பாஸிற்கு. காதல் தேசம், வி.ஐ.பி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் பேசியுள்ளார். 

 

vikram young



இப்படி எந்த வடிவில் இருந்தாலும் சினிமாவில் இருக்கவேண்டுமென்று மனம் தளராமல் இருந்த விக்ரம், ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அந்த ஒரு நல்ல வாய்ப்பு மிக மிக தாமதமாக வந்தது, ஆனாலும் அப்பொழுது தொடங்கிய சினிமா சக்ஸஸ் இன்றும் தொடர்கிறது. வெற்றி தோல்வி தாண்டி, மீம்ஸ், ரசிகர்கள் ரைவல்ரி காலத்திலும் யாராலும் வெறுக்கப்படாத ஹீரோவாக இருக்கிறார் விக்ரம். இதுதான் சீயான் ஸ்பெஷல். ஹேப்பி பர்த்டே சீயான்...    

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

“நாங்க ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல” - பயணியை லெப்ட் ரைட் வாங்கிய ஏர்ஹோஸ்டஸ்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

 passenger gave a befitting reply  Airhostess who spoke low videos goes viral

 

“நாங்க ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. இந்த நிறுவனத்தோட ஊழியர்கள். எங்களிடம் மரியாதையா பேசுங்க” என தன்னை வேலைக்காரி என அழைத்த விமானப் பயணியை, நடுவானில் வைத்து லெப்ட் ரைட் வாங்கிய பணிப் பெண்ணின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

இண்டிகோ விமான நிறுவனத்தின் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வழியாகச் செல்லும் விமானம் ஒன்று, கடந்த 16 ஆம் தேதியன்று வானத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு, அந்த விமானப் பணிப்பெண்கள் தங்களது சேவைகளை வழங்கி வந்தனர். அந்த சமயத்தில், அதே விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு உணவைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

 

இதையடுத்து, அந்தப் பயணி அங்கிருந்த பணிப் பெண்ணை வேலைக்காரி என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விமானப் பணிப் பெண், எங்களை ஏன் அப்படி அழைக்கிறீர்கள் என அந்தப் பயணியிடம் மரியாதையாகக் கேட்டுள்ளார். அப்போது, அந்தப் பயணி, அந்தப் பணிப் பெண்ணைப் பார்த்து வாய மூடு எனக்கூறி சத்தம் போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்ற அந்தப் பணிப் பெண், நீங்கள் வாய மூடுங்க. எங்ககிட்ட இந்த மாதிரி பேசாதீங்க. நாங்க ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. நாங்க இந்த நிறுவனத்தோட ஊழியர்கள். மரியாதையா பேசுங்க. எங்களிடம் கையை நீட்டி பேசாதீங்க" என அந்தப் பணிப் பெண் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். 

 

இதனால், அந்த விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும், இத்தகைய சம்பவங்களை அங்கிருந்த மற்றொரு பயணி, தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்தப் பணிப் பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் கபூர், இந்த வீடியோவை ரீ ட்வீட் செய்துள்ளார். அப்போது, அவர் கூறும்போது "விமானப் பணிப் பெண்களும் நம்மளைப் போல சாதாரண மனிதர்கள்தான். விமானப் பணிப் பெண்களை, வேலைக்காரி போல நடத்துவதை நான் பலமுறை பார்த்துள்ளேன்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.