Skip to main content

அரபு நாடுகளில் அடிமைப் பெண்கள்! -தீர்வு காணாத தேசம்!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

“காவல்துறையை அணுகினால் தனக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் என்றைக்கு நம்புகிறானோ, அன்றைக்குத்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா?” என்று நம்மிடம் ஆதங்கத்தோடு கேட்டார் அப்துல்கலாம் லட்சியா இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ். 

ஏதோ ஒரு ‘சீரியஸ்’ விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான்,  அவரை இந்த அளவுக்குப் பேச வைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது. அவரே அந்த விவகாரத்தை விவரித்தார். 

 

women

 

“புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் ராஜாத்தி. எம்.காம். படித்த இவரை, ஓமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார் திருவாரூரைச் சேர்ந்த பாத்திமா பேகம்.  ஓமன் நாட்டிற்குச் சென்றதும் ராஜாத்தியை  சமையல் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கின்றனர். முடியாது என்று மறுத்திருக்கிறார் ராஜாத்தி. 

அல் மஸ்டாக் மேன் பவர் சப்ளை என்ற பெயரில் இயங்கிவரும் ஏஜென்ஸியின் மேனேஜர் ஜலால், ராஜாத்தியை அடித்து துன்புறுத்தி, அரை நிர்வாணப்படுத்தி, கட்டாயப்படுத்தி சமையல் வேலை செய்ய வைத்திருக்கிறான். அங்கு அந்தப்பெண் பலவிதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறாள்.  துணி துவைக்க வேண்டும்; ஆறு கழிப்பறைகளைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளில் 16 மணி நேரம் இதுபோன்ற கடுமையான வேலைகளைச் செய்யவைத்து, ஒருவேளை உணவையும் சாப்பிடவிடாமல் பண்ணியிருக்கின்றனர்.  

தனக்கு ஏற்பட்ட அவல நிலையை, அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு  அழுதபடி தெரிவித்திருக்கிறார் ராஜாத்தி. உடனே நான்,  ராஜாத்தியிடம் பேசி, ஓமனில் வசிக்கும் நண்பர் சுரேஷ் பாரதியிடமும் பேசி, அனைத்து விபரங்களையும் பெற்று, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதி மூலம் மனுவைத் தயார் செய்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஓமன் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பினேன். தமிழக முதலமைச்சரிடமும் அந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஓமன் நண்பர் சுரேஷ் பாரதி மூலமாக கடந்த 10 நாட்களாக ராஜாத்தியிடம் தொடர்புகொண்டு பல்வேறு முயற்சிகளை எடுத்தேன்.  தூதரகம் மூலமாக அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசி ராஜாத்தியை விடுவிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வீட்டு உரிமையாளரோ, ராஜாத்தியை அந்த மேன்பவர் ஏஜென்ஸி பாத்திமா பேகத்திடமே கொண்டுபோய் விட்டுவிட்டார். 

 

 Slave girls in Arab c Slave girls in Arab countries! -The Land of Undefeated Land!ountries! -The Land of Undefeated Land!


பாத்திமா பேகத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார் ராஜாத்தி. தலை, உதடு, கை, தொடை என உடலில் பல இடங்களிலும் தாக்கி ரத்தக்காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்த பாத்திமா பேகம், கைரேகை வாங்கி ராஜத்தியை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார். அப்போது, சமயம் பார்த்து ராஜாத்தியை தப்பிவரச் செய்திருக்கிறார் சுரேஷ் பாரதி. அவர் மூலமாக கேரளா அசோசியேஷன் நண்பர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த லெனின் மற்றும் முருகேசன் ஆகியோரின் உதவியோடு, தப்பி வந்த ராஜாத்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஓமன் இந்திய தூதரகத்தில் அவர் பத்திரமாகச் சேர்க்கப்பட்டார்.  

 

 Slave girls in Arab countries! -The Land of Undefeated Land!

 

ராஜாத்தி மட்டுமல்ல. இப்படி பல பெண்கள் அங்கே அடிமைப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி, பிறகு மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கூடிய சீக்கிரமே, ராஜாத்தி உள்ளிட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள்.  

புதுக்கோட்டை நண்பர் அசோக்குமார் மூலமாக, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதியின் புகார் மனுவை, எஸ்.பி. மூலமாக டி.எஸ்.பி.யிடம் சேர்த்திருக்கிறோம். தமிழகத்திலுள்ள பெண்களை ஏமாற்றி, அங்கு அழைத்துச்சென்று அடிமைகளாக நடத்துவதற்குக் காரணமாக இருக்கும் பாத்திமா பேகம் மற்றும் பார்வதி ஆகியோர் மீது தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இமிகிரேஷன் அலுவலகத்தில் லுக்-அவுட் நோட்டீஸ் தந்து, பாத்திமா பேகம் சென்னை வரும்போது, விமான நிலையத்திலேயே அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். இது நடந்தால்தான், அரபு நாடுகளில் துயரங்களைச் சந்தித்துவரும்   நூற்றுக்கணக்கான பெண்கள் தப்பிக்க முடியும். 

 

 Slave girls in Arab countries! -The Land of Undefeated Land!

 

இந்த இழிநிலைக்கு யார் காரணம்? பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்தவர்களுக்கு  மாதம் ரூ.30000 சம்பளம் கிடைக்கின்ற வேலை கிடைத்திருந்தால், அந்தப் பெண்களுக்கு இப்படி ஒரு அவலம் ஏற்பட்டிருக்காது. சொந்த நாட்டில் அப்படி ஒரு வேலை வாய்ப்பினைக் கொடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்தான், இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும்.” என்றவர், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் அலட்சியப் போக்கினையும் சுட்டிக்காட்டினார். 

“ஓமனில் மீட்கப்பட்ட ராஜாத்தியின் அம்மா சரஸ்வதியை தொடர்ந்து அலைக்கழித்திருக்கின்றனர். அதனால்,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக பலமுறை அவர் செல்ல நேரிட்டது.  அந்தக் காவல்நிலையம் புகாரை ஏற்க மறுத்த நிலையில், நமது வற்புறுத்தலின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தனர். மேலதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், கீழ்நிலையில் உள்ள ஒருசில காவலர்கள் சாதாரண மக்களின் பிரச்சனையை எவ்வளவு கேவலமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சரஸ்வதியின் புகாரே ஒரு எடுத்துக்காட்டு. 

 

 Slave girls in Arab countries! -The Land of Undefeated Land!

 

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில், கொடுத்த புகாருக்குப் பதிலாக வேறொரு புகாருக்கு சி.எஸ்.ஆர். கொடுத்திருக்கின்றனர். அதில் சரஸ்வதியின் கையெழுத்தையும் பெற்று புகாரைப் பதிவு செய்திருக்கின்றனர். காவல் நிலையங்கள், சாதாரண மக்களின் பிரச்சனையை மிகமிகக் கேவலமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது தவறாக எழுதப்பட்ட அந்த சி.எஸ்.ஆர். பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்ட கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை தலைவர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 Slave girls in Arab countries! -The Land of Undefeated Land!

 

மெத்தனமாகச் செயல்படும் கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் பாத்திமா பேகம், ஜலால், பார்வதி போன்ற போலி ஏஜண்டுகள் மீது  எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? ராஜாத்தி போன்ற அபலைப் பெண்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி நீதி கிடைக்கும்? என்றெல்லாம் மனதுக்குள் கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தில் நீதி மறுக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல சம்பவங்கள் போல இதுவும் கடந்துபோகும் என்றால், தமிழக ஆட்சிமுறை நிர்வாகத்தின் மேல், சட்டம் ஒழுங்கின் மேல், சாதாரண மனிதர்களுக்கு உள்ள நம்பிக்கை தகர்ந்துபோகும். இனிவரும் காலங்களில்  இதற்கான விலையை ஆட்சிமுறை நிர்வாகத்தை தற்போது நடத்துபவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.” என்றார் கொதிப்புடன். 
 

தமிழரான ராஜாத்தி அனுபவித்த  கொடுமைகள், காலம் காலமாக இந்தியப் பெண்களுக்கு  ஓமன் போன்ற அரபு நாடுகளில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கமும் முனைந்ததில்லை. வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்கிறோம்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்பவர்கள், இந்திய மக்கள், குறிப்பாக பெண்கள் சந்தித்துவரும் இதுபோன்ற பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்தாததை என்னவென்று சொல்வது? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தி ரியல் கேரள ஸ்டோரி... இளைஞரின் உயிரைக் காக்க ஒன்று திரண்ட மலையாளிகள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
People who saved Kerala youth's life by collecting blood money in Saudi Arabia
அப்துல் ரஹீம்

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடம்புழா. இப்பகுதியைச் சேர்ந்த தம்பதி முல்லா முஹம்மது - பாத்திமா. இவர்களது மகன் அப்துல் ரஹீம். இவரின் தந்தை இறந்த நிலையில், அப்துல் ரஹீம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அப்போது அவரது வயது 26. வேலை தேடிச்சென்ற அப்துல் ரஹீமுக்கு சவூதியின் ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது அப்துல் ரஹீமின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எப்போதும் போல மாற்றுத்திறனாளி சிறுவனை அப்துல் ரஹீம் காரில் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ட்ராபிக் சிக்னல் விழுந்ததால் கார் சிறிது நேரம் நின்றுள்ளது. ஆனால், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் காரை இயக்க சொல்லி அடம்பிடித்துள்ளார். உடனே, கார் ஓட்டுனர் அப்துல் ரஹீம் சிக்னல் மீறிச் செல்ல கூடாது என சிறுவனிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனாலும், சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார். மீண்டும் சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காத அப்துல் ரஹீம் மறுபடியும் வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவனின் பேச்சு சத்தம் கேட்காத நிலையில், அப்துல் ரஹீம் பின்பக்கம் திரும்பி பார்த்து அதிர்ந்து போயுள்ளார். சிறுவன் காரிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்துல் ரஹீம் நடந்த சம்பவத்தைக் கூறி, அரேபியாவில் வேலை செய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீர் என்பரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவர் கொடுத்த ஐடியாவின் படி பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீம்மை கட்டிப்போட்டு சிறுவனை தாக்கியதாக முதலாளியிடம் நாடகம் ஆடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனம் இறங்கி வந்த சிறுவனின் பெற்றோர்  இழப்பீடாக பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன் இந்திய மதிப்பு 34 கோடி ரூபாய் ஆகும். அதனையும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்தால் அப்துல் ரஹீம் உயிர் தப்பிக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் மலையாளிகள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கி நிதி திரட்டினர். அத்துடன், சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, குறுகிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு மகனை காண இருப்பதாக அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின் முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' போன்ற படத்தைக் கொண்டாடும் பாஜகவிற்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்திருப்பதாக கேரள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியல் கேரள ஸ்டோரி இதுதான் என அப்துல் ரஹீமுக்கு மக்கள் செய்திருக்கும் உதவியைக் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடியைத் திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.