Skip to main content

நீட் தேர்வுக்கு எதிரான அதிமுகவின் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுப்பதை போல் இருக்கிறது -ரவிசங்கர் அய்யாகண்ணு தடாலடி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
hj

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இதுஒருபுறம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளை கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக அவரை கண்டித்தது. முக்கிய தலைவர்கள் எல்லாம் சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைபோல் பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க சிந்தனையாளர் ரவிசங்கர் அய்யாகண்ணு அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

நீட் தேர்வு தொடர்பாக ஆதாரப்பூர்வமான பல்வேறு தகவல்களை முகநூல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறீர்கள். இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு மூன்று மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் கூட இதுதொடர்பான காரசார விவாதங்கள் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்த போராட்டமே எந்த பார்வையில் அணுகப்படுகின்றது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. திமுக தொடர்ந்து 2010 முதல் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. மற்ற கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதில் ஆதரவாக இருந்து வருகிறார்கள். இது சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது. கடந்த வாரம் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடரும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் பதாதைகளை வைத்து கொண்டு இந்த நீட் தேர்வு எதிராக போராடினார்கள். மாணவர்கள் தற்கொலைக்கு பிறகு திமுக தலைவர் வெளியிட்ட அந்த அறிக்கைகள் பரபரப்பாக பேசப்பட்டது. நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்போம் என்று தெளிவாக கூறியிருந்தார். ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கும் புதிதாக சீட் ஒதுக்கி கொடுப்போம் என்ற அளவில் அந்த உரையாடல் இருந்தது. திமுகவுக்கு இந்த பெருமை போகக்கூடாது என்பதற்காக பல்வேறு நாடகங்கள் தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

 

ஆனால் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரும் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று பேசினார்களே?

 

தமிழ்நாட்டுக்கு நீட் எப்போது வந்தது? 2017ம் ஆண்டுதான் அனிதா இறந்தார். அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள். இவர்கள் தானே ஆட்சியில் அப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சியில் நீட் வரவில்லை, முதல்வராக ஜெயலலிதா இருக்கின்ற வரையிலும் கூட நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. தானாக ஆட்சி நடத்த முடியாத துணிவில்லாத ஆட்சியாளர்கள் எப்போது தமிழகத்திற்கு வந்தார்களோ அப்போதுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்தது. அதிமுக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  நீட் தேர்வுக்கு அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுக்கும் அழுத்தத்தை போலத்தான் இருக்கிறது. 

 

ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால் அந்த தீர்மானம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். அதை பற்றி கேட்க மாநில அரசுக்கு தோணவில்லை. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு கடந்து போனார்கள்.  கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆளும் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக என்ன செய்தது என்று பாருங்கள். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத வேலைகளை திமுக தொடர்ந்து செய்து வருகின்றது. திமுக தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. ஆளும் அதிமுகவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை திமுகவிடம் தொலைக்காட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றது. இது எப்படி சரியாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. 

 

திமுக இதில் அரசியல் செய்கிறது, எதற்காக நீட் தேர்வுக்கு முதல் நாள் இனி நீட் தேர்வு இருக்காது என்று திமுக சொல்ல வேண்டும் என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்களே? சூரியாவின் அறிக்கையையும் விமர்சனம் செய்கிறார்களே?

 

கல்வி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராகவும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இந்த சம்பவங்கள் நடைபெற்ற நான்கு தினங்களுக்கு முன்பு கூட நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணியினர் போராட்டங்களை முன் எடுத்தனர். தற்கொலையை வைத்து திமுக அரசியல் பண்ணவில்லை. நீட் தேவையில்லை என்று முதலில் குரல் கொடுத்த இயக்கமும் அதுதான், தற்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இயக்கமும் அதுதான். நீட் தேர்வு வேண்டாம் என்று இந்த கரோனா காலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியதாக கூறினார். கடிதம் எழுதி என்ன சாதித்தார்கள். நீட் தேர்வு நடக்கவில்லையா? எனவே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள், அதனால்தான் சூர்யா போன்ற நீட் தேர்வை எதிர்க்கும்போது, அதற்கு பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறார்கள். 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.