Skip to main content

காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா மோடி?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம்? ஒரு வேறுபாடும் இல்லை என்றே சொல்ல வேண்டும். 2014 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றிருக்கிறார். 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது.

 

modi



இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னாலும் 23 கட்சிகள் கூடிப் பேசியும், கூட்டணி அமையவே இல்லை. காங்கிரஸின் பிடிவாதமும், அது விட்டுக்கொடுத்தாலும் ஏற்காத மாநிலக் கட்சிகளால் மெகாகூட்டணி அமையாமலே போயிற்று.  அதற்கு மாறாக, கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சி களையும் தாஜா செய்து தனது அணி யில் இறுக்கிப் பிடித்து வைத்தது பா.ஜ.க.. மாறாக, எங்கே தனக்கு கட்சி பலம் இல்லையோ, அங்கேயெல்லாம் கட்சிகளை உடைத்து தனது அடித்தளத்தை அமைப்பதில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

 

modi



குறிப்பாக, திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே மொத்தமாக பா.ஜ.க.வாக்கி, அந்த மாநிலத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்து, பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா காலத்தில் 48 சதவீதம் வாக்குகளுடன் இருந்த இடதுமுன்னணி இப் போது 11 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்திருக் கிறது. மம்தாவை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் நிலைமைக்கு இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் சென்றதால்தான் இந்தப் பின்னடைவு என்று அரசியல் பார்வை யாளர்கள் கூறுகிறார்கள்.

 

mamta



உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி அறி வித்தது. ஆனால், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று மாயாவதி சொன்னாரே தவிர, காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று நிரா கரித்தார். இத்தனைக்கும், காங்கிரஸ் 6 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தது. 2014 தேர்தலில் 4 தொகுதிகளை ஜெயித்திருந்தது. பகுஜன் சமாஜ் 2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மாயாவதியும், அகிலேஷும் புறக்கணித்ததால் கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்தார்கள். போதாக்குறைக்கு பிரியங்காவையும் களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்தார்கள். இதுவே உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது. ஆனாலும் பா.ஜ.க. கடந்த முறை பெற்றிருந்த 71 இடங்களில் 11 இடங்களை இழந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் 11 இடங்களையும், சமாஜ்வாதி  8 இடங்களையும் பெற்றிருக்கின்றன. அமேதியில் ராகுல் தோல்வி அடைந்திருக்கிறார். கூட்டணி அமைக்கத் தவறியதால் கிடைத்த கைமேல் பலன் இதுதான்.

 

chandrababu



மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் சமீபத்தில்தான் காங்கிரஸ் அரசு அமைத்திருந்தது. ஆனால், அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள் செய்யத் தவறிய விவசாயக்கடன் தள்ளுபடியை காங்கிரஸ் அரசுகள் பொறுப் பேற்றவுடன் நிறைவேற்றியிருந்தன. அப்படியிருந்தும் தோல்வி ஏன்? இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் பா.ஜ.க. பதித்து வைத்திருக்கும் இந்துத்துவா அரசியல்தான். இரண்டு மாநிலங்களிலும் பாதிக்குப் பாதிகூட வெற்றிபெற முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் மூத்தோர் இளையோர் இடைவெளியும் ஒரு காரணம்'' என்கிறார்கள்.


ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் இந்த முயற்சிக்கு அணைபோட்டு தடுத்துவிட்டார். டெல்லியில் 7 தொகுதியையும் பா.ஜ.க.விடம் இழக்க இது காரணமாக அமைந்துவிட்டது. பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருந்த மம்தா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தவறிவிட்டனர். இதன் விளைவு மேற்குவங்கத்தில் பா.ஜ.க. 16-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற உதவியிருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், மக்களவைத் தொகுதிகளையும் ஸ்வீப் செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டணிக் குழப்பங்கள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான சாட்சி. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிலும் மாநிலத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை தவிர்க்க முடியாத தலைவர்களால் ம.ஜ.த. ஆட்சியில் இருந் தும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி யைத் தழுவினார். 1972 ஆம் ஆண்டிலிருந்து தோல்வியைச் சந்திக்காத மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக தோல்வி யடைகிறார். மதச்சார் பற்ற ஜனதாதளத்தின் குடும்ப அரசியல் கர்நாடக அரசியலை கேலிக்கூத்தாக்கிவிட்டது'' என்கிறார்கள்.

குடும்ப அரசியல் என்று பார்த்தால், கர்நாடகாவில் தேவ கவுடா, அவருடைய பேரன் நிகில் குமாரசாமி ஆகியோரும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவும், மத் தியபிரதேசத்தில் ஜோதி ராதித்திய சிந்தியாவும், காஷ்மீரில் முப்தி முகமது சயீதின் மகள் மெஹ்பூபா முப்தியும், தோல்வி அடைந்தனர். இதற்கு மாறாக, தமிழகத்தில் கலைஞரின் மகள் கனிமொழி, காஷ்மீரில் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த், மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் கமல்நாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் கடந்த முறை தங்களுடைய ஒற்றுமையின்மையால் பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த எதிர்க்கட்சிகள், இம்முறையும் கூட்டணி கணக்கில் தவறியதால் மோடியை பிரதமராக்கியுள்ளன. கடந்தமுறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போகும் மோடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த குளறுபடிகளின் விளைவு இனிமேல்தான் தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தார்கள். அதைச் சரிசெய்வதில் மோடி தனது 2.0 ஆட்சியில் ஆர்வம் காட்டுவாரா? எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை மோடி எதிர்கொள்வாரா? அல்லது கடந்த காலத்தைப் போல காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் பா.ஜ.க. ஏற்கனவே வகுத்துள்ள இந்துத்வா கொள்கைப்படி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நீக்குவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, இந்து-சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பது, இந்து நாடாக மாற்றுவது என மோடி அரசின் அடுத்தடுத்த ஆட்டம் ஆரம்பமாவதைக் காண இந்தியா காத்திருக்கிறது.
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.