Skip to main content

சீட் கொடுக்கறதா இருந்தா கட்சியே காணாமப் போயிரும்... அதிமுகவை கலக்கும் சோனாலி... அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

திடீரென்று அவ்வப்போது வானில் புயல்கள் உருவாகி, மழையாலும், புயலாலும் பல ஊர்கள் அடியோடு சாய்ந்து போகிற பல சம்பவங்களை நாம் கண் முன்னே பார்த்திருக்கிறோம் . "அப்படியொரு புயல் சோனாலி என்கிற பெயரில் கோவை அ.தி.மு.க.வில் வீசத் தொடங்கி இருக்கிறதா? இல்லையா?' என அ.தி.மு.க.வினர் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .

 

sonali



"அதென்ன சோனாலி புயல்?' கட்சிக்காரர்களிடமே கேட்டோம்.

"சார்... சோனாலி பிரதீப் ஒரு வட நாட்டுப் பெண். கல்யாணமாகி பையன் ஒண்ணு, பொண்ணு ஒண்ணு இருக்கு. இந்த சோனாலி சினிமா நடிகையையும் தோற்கடிக்கும் அழகோடு இருந்ததால வெளிநாட்டுல நடந்த "மிஸஸ் யுனிவர்சல்' போட்டியில கலந்துகிட்டு முதல் பரிசை ஜெயிச்சுட்டு வந்தாங்க. அப்படி வரும் போது கோவை ஏர்போர்ட்டுல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிகூடயும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிகூடயும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் சோனாலி ஆட்டம் தாங்க முடியலை. சோனாலியை நெனச்சு எங்க கட்சிக்காரங்க பலரும் உருக ஆரம்பிச்சுட் டாங்க. கட்சியில இருக்கற பெரிய பெரிய ஆளுக எல்லாம் சோனாலி பின்னாலயே சுத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு பேச்சு.

 

sonali admk



சோனாலியும் கோவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் நிகழ்ச்சியில எல்லாம் கலந்துகிட்டு முன்னால நின்னாங்க. அமைச்சர் சென்னையில இருந்து கோவைக்கு வரும் போதெல்லாம் இந்த சோனாலி பொண்ணும் கரெக்ட்டா வந்திருது. "கட்சியில நான் சேர்ந்துட்டேன். மேயர் சீட் எனக்குத்தான்னு அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாரு. அதுனால தான் நான் மேயர் சீட் கேட்டு விண்ணப்பம் போட்டிருக்கேன்'னு அந்தப் பொண்ணு சொல்ல ஆரம்பிச்சுருச்சு. அந்த சோனாலி பொண்ணுக்கு சீட் கொடுக்கறதா இருந்தா கட்சியே காணாமப் போயிரும்...'' என எச்சரிக்கைவிடுக்கிறார்கள் பட்டிமன்றத்தின் ஒருசாரார் கோபமாய் .


பட்டிமன்றத்தின் இன்னொரு சாராரோ, "சார்... மொதல்ல அந்த சோனாலி தன்னம்பிக்கை பேச்சாளி. அதன் மூலமாகத்தான் பல அ.தி.மு.க. நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டாங்க. கவுண்டம்பாளையத்துலதான் வீடு. இப்பதான் கட்சிக்கு வந்திருக்காங்க. எப்படி மேயர் சீட் கொடுப்பாங்க? பொதுக்குழுவிலேயே 5 வருடம் தொடர்ச்சியா கட்சியில் இருந்தவங்களுக்குத்தான் சீட்டுன்னு சொல்லிட்டாங்க. அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஆட்கள் இந்தப் பொண்ண வச்சு கேம் ஆடறாங்க. இப்ப வெளியான போட்டோ எல்லாமே அந்த சோனாலி பொண்ணோட பேஸ்புக்ல இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பொண்ணே இந்த போட்டோக்களை வெளியிட்டு கட்சியில இருக்கற எல்லார் கூடயும் ரொம்ப பழக்கம் இருப்பதாக ஒரு மாயை உருவாக்க ஆரம்பிச்சுருச்சு.


அமைச்சர் வேலுமணிக்கு வலதுகரமா இருக்கக்கூடிய இன்ஜினியர் வடவள்ளி சந்திரசேகர் மனைவி ஷர்மிளாவுக்குதான் மேயர் சீட்டுங்கறது கட்சிக்காரங்களோட புள்ளைகள கேட்டா கூட சொல்லுவாங்க. அப்படியிருக்கும்போது... சோனாலி பற்றி கிளப்பிவிடுவதில் துளிகூட உண்மை இல்லை'' என்கிறார்கள் சிரிப்பாய். "சோனாலி புயல் கோவை அ.தி.மு.க.வை சாய்க்காமல் இருந்தால் சரி...' என்கிறார்கள் கட்சியின் உண்மை விசுவாசிகள்.

"எனக்கு அ.தி.மு.க.வில் அத்தனை பெரிய ஆட்கள் கூடயும் நல்ல தொடர்பு இருக்கிறது... நான் சொன்னால் தமிழ்நாடு கவர்மென்டில் என்ன வேணாலும் நீங்கள் சாதித்துக் கொள்ளலாம்... என சொல்லும் சோனாலி.. முன்னாள் பா.ஜ.க. ஆள். பா.ஜ.க. மெல்ல தங்கள் ஆட்களை அ.தி.மு.க.விற்குள் மறைமுகமாக நுழைக்கிறது. அதை எங்கள் ஆட்கள் இரு கரம் நீட்டி மறைமுகமாக வரவேற்கிறார்கள்'' என கொதிக்கிறார்கள் கோவை ர.ர.க்கள்.


 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.